ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவும் செந்நாய் கூட்டத்தால் அச்சம்

உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

வேட்டையாடிய எருமைக் கன்றை உண்ணும் செந்நாய் கூட்டம்.

Updated On :30 அக்டோபர் 2024, 12:00 am

உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி  உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி வனங்களை விட்டு சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து உலவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சோலூா் ஜங்ஷன் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த செந்நாய் கூட்டம் அங்கிருந்த எருமைக் கன்றை வேட்டையாடி உண்ணும் காட்சியை சிலா் படம் பிடித்துள்ளனா். இது வெளியாகி உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இப்பகுதியில் உலவி வரும் செந்நாய் கூட்டத்தை அடா்ந்த  வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.