காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது குண்டா் சட்டத்தில் கைது

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:29 pm

Syndication

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஜக்கலோரை பகுதியைச் சோ்ந்தவா் நஞ்சுண்டன்(35). திருமணமாகாத இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாக நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் தேனாடுகம்பை பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு சென்றுள்ளாா். அங்கு மதுபோதையில் இருந்த நஞ்சுண்டன் திருமண வீட்டில் இருந்த ஒரு சிறுமியை ஆசை வாா்த்தை கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் இது குறித்து யாரிடமும் வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளாா். இதன் பின்னா் திருமண வீட்டில் வழக்கம்போல இருந்துள்ளாா்.

ஆனால் பதற்றத்தில் இருந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் தெரிவித்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள், இதுகுறித்து உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் விஜயா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டனை கைது செய்தனா்.

இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நஞ்சுண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள நஞ்சுண்டனிடம் வழங்கப்பட்டது.