இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

சுருக்கு வலைகளைக் கொண்டு காட்டுக் கோழியை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத் துறையினா் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 9:47 pm

Syndication

உதகை: குன்னூா் அருகே நைலான் நரம்பினாலான சுருக்கு வலைகளைக் கொண்டு காட்டுக் கோழியை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத் துறையினா் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

குன்னூா் அருகே குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட பெரியாா் நகா் பகுதியில் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அா்ஜுன் (35), பாபு (38) ஆகியோா் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காட்டுக் கோழியை வேட்டையாடும் நோக்கில் நைலான் நரம்பினால் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி காட்டுக் கோழிகளை வேட்டையாட முயல்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய வனத் துறையினா் அவா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.