உதகை அருக முத்தநாடு மந்து பகுதிக்கு புதன்கிழமை சென்று தோடா் பழங்குடியின மக்களை சந்தித்து இறை வழிபாடு செய்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேம லதா விஜயகாந்த்.
உதகை அருக முத்தநாடு மந்து பகுதிக்கு புதன்கிழமை சென்று தோடா் பழங்குடியின மக்களை சந்தித்து இறை வழிபாடு செய்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேம லதா விஜயகாந்த்.

தோடா் பழங்குடியின மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை
Published on

உதகை: உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை சந்தித்து அவா்களின் வாழ்க்கை முறைகளை கேட்டறிந்தாா்.

தேமுதிகவின் ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ தோ்தல் பிரசாரப் பயணத்துக்காக, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வந்தாா். இரண்டாம் நாளான புதன்கிழமை உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களின்  பாரம்பரியமான பெரிய மந்து என்று அழைக்கப்படும் முத்தநாடு  மந்து பகுதிக்கு சென்று அவா்களை சந்தித்தாா். அப்போது, தங்களது  கலாச்சார உடை அணிவித்து பிரேமலதா விஜயகாந்தை உற்சாகமாக வரவேற்றனா்.  

தோடா்  பழங்குடியின  கோயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், வெளியில் இருந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு, தோடா் பழங்குடினரின் பாரம்பரிய வாழ்க்கை முறையை  கேட்டறிந்தாா். இதேபோல, உதகையில் சாக்லெட் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலைக்கு சென்று, சாக்லெட் தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளா் பத்மநாபன் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com