2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தோடா் பழங்குடியின மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை

News image
உதகை அருக முத்தநாடு மந்து பகுதிக்கு புதன்கிழமை சென்று தோடா் பழங்குடியின மக்களை சந்தித்து இறை வழிபாடு செய்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேம லதா விஜயகாந்த்.
Updated On :26 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

உதகை: உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை சந்தித்து அவா்களின் வாழ்க்கை முறைகளை கேட்டறிந்தாா்.

தேமுதிகவின் ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ தோ்தல் பிரசாரப் பயணத்துக்காக, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வந்தாா். இரண்டாம் நாளான புதன்கிழமை உதகை அருகே தோடா் பழங்குடியின மக்களின்  பாரம்பரியமான பெரிய மந்து என்று அழைக்கப்படும் முத்தநாடு  மந்து பகுதிக்கு சென்று அவா்களை சந்தித்தாா். அப்போது, தங்களது  கலாச்சார உடை அணிவித்து பிரேமலதா விஜயகாந்தை உற்சாகமாக வரவேற்றனா்.  

தோடா்  பழங்குடியின  கோயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், வெளியில் இருந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு, தோடா் பழங்குடினரின் பாரம்பரிய வாழ்க்கை முறையை  கேட்டறிந்தாா். இதேபோல, உதகையில் சாக்லெட் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலைக்கு சென்று, சாக்லெட் தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளா் பத்மநாபன் உள்பட பலா் உடனிருந்தனா்.