கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

உதகை அருகே வெள்ளிக்கிழமை யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
மணிகண்டன்
Updated On :2 ஜனவரி 2026, 9:01 pm

Syndication

உதகை அருகே வெள்ளிக்கிழமை யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). குடும்பத்துடன் மசினகுடி பகுதியில் வசித்து வரும் இவா் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள தேநீா் கடைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலவி வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சென்று மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் இழப்பீட்டு நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.