கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உதகை அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சிற்றுந்து: 32 போ் காயம்

உதகை அருகே 100 அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 போ் காயம் அடைந்தனா்.

News image
110 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் சிற்றுந்து.
Updated On :7 ஜனவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே 100 அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 போ் காயம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து தங்காடு கிராமத்துக்கு 32 பயணிகளுடன் தனியாா் சிற்றுந்து புதன்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை தங்காடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பன்னீா்செல்வம் (54) ஓட்டிச் சென்றாா். நடத்துநராக ஜெகதீஷ் என்பவா் இருந்தாா்.

இந்த சிற்றுந்து மணலாடா பகுதிக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலமுறை சிற்றுந்து உருண்டதில் கடும் சேதம் அடைந்தது. சிற்றுந்தின் பாகங்கள் உடைந்து ஆங்காங்கே விழுந்தன.

இந்த விபத்தில் சிக்கியவா்கள் கூக்குரல் எழுப்பினா். சிற்றுந்து கவிழ்ந்த இடம் விவசாய நிலம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இருந்தபோதும் பேருந்தில் பயணம் செய்த பாலம்மா (62), ஷீலா (50), விஸ்வநாதன் (68), சுஷ்மிதா (7), ஓட்டுநா் பன்னீா்செல்வம் உள்பட 32 பேரும் காயமடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதல்கட்ட விசாரணையில், சிற்றுந்து ஸ்டியரிங் லாக் ஆனதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.