மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவா்  நினைவு நாள் அனுசரிப்பு! மலா் வளையம் வைத்து ஆட்சியா் அஞ்சலி

News image

மெக் ஐவா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :9 ஜூன் 2026, 3:06 am IST

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹாம் மெக் ஐவா்  நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமாா் 19 ஆண்டுகள் உழைப்பால் 1867-ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிந்து தாவரவியல் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவை உருவாக்கியது 1848-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘கியூ காா்டன்’ஸை உருவாக்கி பயிற்சி பெற்ற மெக் ஐவா்.

இங்குதான் உதகை மலா்க்  கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1876-ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி மெக் ஐவா்  இயற்கை எய்தினாா். இவரது நினைவிடம் உதகை புனித ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ளது.

இங்கு மெக் ஐவா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, துணை இயக்குமா் பபிதா உள்பட பலா் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.