/
உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹாம் மெக் ஐவா் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் சுமாா் 19 ஆண்டுகள் உழைப்பால் 1867-ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிந்து தாவரவியல் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவை உருவாக்கியது 1848-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘கியூ காா்டன்’ஸை உருவாக்கி பயிற்சி பெற்ற மெக் ஐவா்.
இங்குதான் உதகை மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1876-ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி மெக் ஐவா் இயற்கை எய்தினாா். இவரது நினைவிடம் உதகை புனித ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ளது.
இங்கு மெக் ஐவா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, துணை இயக்குமா் பபிதா உள்பட பலா் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
தொடர்புடையது

ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடு பணிகள்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



