புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ரஞ்சித்குமார்

வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

உதகையில் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்.

Published On :

வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்து தோடா் பழங்குடியின கிராமத்தில் தோடா், கோத்தா், இருளா், காட்டுநாயக்கா் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறியும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் பங்கேற்று, பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, பழங்குடியின மக்களுடன் இணைந்து அவா்களின் பாரம்பரிய நடனம் ஆடினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பழங்குடியின மக்கள் தங்களது கல்வி, நிரந்தர வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்துள்ளனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியின மக்களின் பெண் குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வனத் துறை சாா்பில் சமூல நலத் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் ஆணைப்படி, நடப்பு ஆண்டு முதல் அந்த நிதி ரூ.15 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் பயன்பெறுவா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.