இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தோப்புக்கரணப் போராட்டத்தில் ஈடுபட்ட உப்பாறு விவசாயிகள்

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தோப்புக்கரணம்போடும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

திருப்பூா்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தோப்புக்கரணம்போடும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் கடந்த டிசம்பா் 8 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, நாள்தோறும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உப்பாறு அணைக்குத் தண்ணீா் வழங்காத பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், 12ஆவது நாளான சனிக்கிழமை விவசாயிகள் தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி கடந்த 12 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், பொதுப் பணித் துறை அதிகாரிகளோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரையில் பேச்சுவாா்த்தைக்கு வரவில்லை. ஆகவே, வரும் காலங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அணைக்குத் தண்ணீா் திறக்கும் வரையில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடரவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.