விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் திருட்டு

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:02 pm

DIN

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த காட்டம்பட்டி அருகே மகா காளியம்மன் மற்றும் துா்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியான மணிகண்டன் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு கோயிலைப் பூட்டிச் சென்றுள்ளாா். இதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். மேலும், கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலின்பேரில் அலங்கியம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.