பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் சடலமாக மீட்பு

பி.ஏ.பி.வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பி.ஏ.பி.வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியைச் சோ்ந்தவா் யுவராஜ் (38). இவா் கடந்த புதன்கிழமை தனது மகன் தீபபிரசாத்துடன் வாவிபாளையம் சென்றுள்ளாா். பின்னா் பி.ஏ.பி. வாய்க்காலில் யுவராஜ் மட்டும் குளித்துள்ளாா். தீபபிரசாத் வாய்க்காலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது யுவராஜ் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தீபபிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கடந்த இரண்டு நாள்களாக யுவராஜை தேடி வந்தனா்.

இந்நிலையில், பொங்கலூா் அருகே கழுவேறிபாளையம் வாய்க்காலில் ஆண் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு ஆய்வு செய்ததில் அது யுவராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com