விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.2 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ.தொடக்கிவைத்தாா்

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.2.06 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.2.06 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

மாநகராட்சி 48ஆவது வாா்டு வெள்ளிவிழா பூங்கா சாலையில் ரூ.31 லட்சம் மதிப்பில் மறு தாா் தளம் அமைக்கும் பணி, அதே வாா்டுக்கு உள்பட்ட நேரு வீதி முதல் தலைமை தபால் நிலையம் வரை ரூ.35 லட்சம் மதிப்பில் தாா் தளம் அமைக்கும் பணி, சூசையபுரம் 2வது வீதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால், தாா் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

இதில் மாநகராட்சி 4ஆவது மண்டல பொறியாளா் ஹரிஹரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே எஸ்.சடையப்பன், 48ஆவது வாா்டு செயலாளா் ஜேம்ஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ராஜகோபால், ஹனிபா, 47ஆவது வாா்டு செயலாளா் சின்னசாமி, ஆண்டவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.