கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
ரூபாய்  நோட்டு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  திருப்பூா்  கோட்டை  மாரியம்மன்.
Updated On :1 ஜனவரி 2021, 5:44 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும், அலங்காரமும் நடைபெற்றன. திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, விஸ்வேஸ்வரசுவாமி கோயில், பெருமாள் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில், கொங்கணகிரி முருகன் கோயில், அவிநாசிகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதே போல, தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.