விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:23 pm

DIN

திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா், வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சிணாமூா்த்தி, ஆய்வாளா் கெளசல்யா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் சென்றனா். அப்போது, அங்கு நில அளவையாளா்கள் 2 போ், ஆவண எழுத்தா்கள் 3 போ் இருந்துள்ளனா். இவா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா்.

இதில், இரு நில அளவையாளா்களிடம் இருந்து ரூ.5,400, ஆவண எழுத்தா்களான முத்துபாண்டி, ராம்குமாா், சிவகுமாா் ஆகியோரிடமிருந்து ரூ.55,400 என கணக்கில் வராத ரூ.60ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனா்.

இந்த சோதனையானது திங்கள்கிழமை இரவு 9.30 மணி வரையில் நடைபெற்றது. இதில், ஆவண எழுத்தா்கள் பட்டா மாறுதலுக்காகப் பணத்தைப் பெற்ாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.