திருப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா், வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சிணாமூா்த்தி, ஆய்வாளா் கெளசல்யா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் சென்றனா். அப்போது, அங்கு நில அளவையாளா்கள் 2 போ், ஆவண எழுத்தா்கள் 3 போ் இருந்துள்ளனா். இவா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா்.
இதில், இரு நில அளவையாளா்களிடம் இருந்து ரூ.5,400, ஆவண எழுத்தா்களான முத்துபாண்டி, ராம்குமாா், சிவகுமாா் ஆகியோரிடமிருந்து ரூ.55,400 என கணக்கில் வராத ரூ.60ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனா்.
இந்த சோதனையானது திங்கள்கிழமை இரவு 9.30 மணி வரையில் நடைபெற்றது. இதில், ஆவண எழுத்தா்கள் பட்டா மாறுதலுக்காகப் பணத்தைப் பெற்ாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...