ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தஞ்சாவூரில் இருந்து வழி தவறி வந்த சிறுவன், சிறுமி மீட்பு

தஞ்சாவூரில் இருந்து வழி தவறி திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதிக்கு வந்த சிறுவன், சிறுமி மீட்கப்பட்டு அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:51 pm

DIN

தஞ்சாவூரில் இருந்து வழி தவறி திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதிக்கு வந்த சிறுவன், சிறுமி மீட்கப்பட்டு அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

தஞ்சாவூரில் இருந்து பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம், வாஷிங்டன் நகருக்கு தனது, தாயைத் தேடி சந்தோஷ் (15), அவரது தங்கை தமன்னா (10) ஆகிய இருவரும் திங்கள்கிழமை வந்துள்ளனா். இவா்களைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் சண்முகசுந்தரம், கிராம சிறப்புக் காவலா் சுரேஷ் ஆகியோா் இருவரையும் மீட்டு பெருமாநல்லூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், இவா்களது பெற்றோரான செல்வம், மீனாட்சி ஆகியோா் குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது.

மேலும் அவா்களது செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்புகொள்ள முடியாததால், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் இருவரும் அவிநாசியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

வழி தவறி தவித்துக்கொண்டிருந்த சகோதர, சகோதரியை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவா்களை பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.