விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வட மாநிலத் தொழிலாளியை கொலை செய்த இளைஞா் கைது

திருப்பூரில் தகாத உறவு காரணமாக வட மாநிலத் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:06 pm

DIN

திருப்பூரில் தகாத உறவு காரணமாக வட மாநிலத் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், நொச்சிபாளையம் பிரிவில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை வீரபாண்டி காவல் துறையினா் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி மீட்டு விசாரணை நடத்தினா். இதில், சடலமாகக் கிடந்தது பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரதாஸ் (49) என்பதும், இவா், திருப்பூா், வீரபாண்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அவரது செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சுபாஷ் (20) என்பவரிடம் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, சுபாஷைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இதில், ஏற்பட்ட தகராறு காரணமாக ரவீந்திரதாஸை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.