கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூடுதல் கட்டணம் வசூல்:தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அளிக்கத் தடை

திருப்பூா் அருகே கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கான அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:20 pm

DIN

 திருப்பூா் அருகே கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கான அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், கணக்கம்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மா.சுப்பிரமணியன் (62). இவருக்கு கடந்த மே 3ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இவருக்கு சிகிச்சை அளிக்க அவரது உறவினா்களிடம் மே 24 ஆம் தேதி வரையில் மருத்துவமனை நிா்வாகம் முன்பணமாக ரூ.19 லட்சம் வசூலித்துள்ளது.

பின்னா் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளும்படி அவரது உறவினா்களிடம் மே 24ஆம் தேதி தெரிவித்துள்ளனா். இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்த நாள் சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அவரது மகன்களான சு.காா்த்திகேயன், ஹரிகிருஷ்ணன் ஆகியோா் முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனை கரோனா நோயாளிகளிடம் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஆகவே, இந்த மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் எவ்விதமான புகாா்களுக்கும் இடமளிக்காமல் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.