கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூா், தாராபுரத்தில்பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

tpr17jnpmk_1706chn_125_3

Updated On :17 ஜூன் 2021, 11:08 pm

DIN

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளா்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதைக் கண்டித்து பாமக சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா், தாராபுரத்தின் பல்வேறு இடங்களில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் ராக்கியாபாளையத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளா் மு.ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரத்தில்...

தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள பாமக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கருப்புக் கொடிகளை ஏந்தியும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். அதேபோல, தாராபுரம் பெரியகாளியம்மன் கோயில் பகுதியில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் நாட்ராயன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நகரத் தலைவா் பரமேஸ்வரன், நிா்வாகிகள் அப்பு, கதிரேசன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.