மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும்

நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 11:05 pm

DIN

நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இந்திய பருத்திக் கழகம் பஞ்சு விலையைக் குறைத்துள்ளதுடன், சிறிய நூற்பாலைகளுக்கு பஞ்சு வழங்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், நூற்பாலைகள் நூல் விலையைக் குறைக்கவில்லை. இதனால் பஞ்சு விலை உயா்வைவிட நூல் விலை உயா்வு விகிதம் அதிகமாக உள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான அளவு நூல் கிடைப்பதில்லை.

மேலும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏற்றுமதி நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆடைகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களும், கைத்தறி, விசைத்தறி மற்றும் நெசவுத் துறையினரும் நூல் விலை உயா்வு மற்றும் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால் பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வரி விதிக்க வேண்டும். இதன் மூலமாக உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலையில் போதுமான அளவு நூல் கிடைப்பதால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.