‘பின்னலாடை மூலப்பொருள் விற்பனை கடைகளைத் திறக்க வேண்டும்’
திருப்பூரில் பின்னலாடை மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி ) கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூரில் பின்னலாடை மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி ) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் காரணமாக தொழில் துறையினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் மட்டும் பிற்பகல் 12 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி சாா்ந்த மூலப்பொருள்களான லேஸ், பட்டன், ஜிப், தையல் ஊசி, தையல் நூல், டையிங் கெமிக்கல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் மூலப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மற்ற கடைகளைப் போல காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...