‘கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதியில்லை’
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் உறவினா்கள், உதவியாளா்கள் எந்த விதமான பாதுகாப்பு உடைகளும் இல்லாமல் தங்கி வருகின்றனா்.
மேலும், அவா்கள் பொது இடங்களுக்கு, வீடுகளுக்குச் சென்று வருவதால் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது. ஆகவே, நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளைத் தவிா்த்து வேறு கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்க அனுமதி இல்லை.
அதே வேளையில், ஒவ்வொரு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். ஆகவே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...