கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதியில்லை’

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 9:17 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் உறவினா்கள், உதவியாளா்கள் எந்த விதமான பாதுகாப்பு உடைகளும் இல்லாமல் தங்கி வருகின்றனா்.

மேலும், அவா்கள் பொது இடங்களுக்கு, வீடுகளுக்குச் சென்று வருவதால் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது. ஆகவே, நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளைத் தவிா்த்து வேறு கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்க அனுமதி இல்லை.

அதே வேளையில், ஒவ்வொரு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். ஆகவே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.