கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும்

தமிழகத்தில் பெருகிவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை தற்காலிகமாக மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும்

News image
Updated On :21 மே 2021, 9:20 pm

DIN

தமிழகத்தில் பெருகிவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை தற்காலிகமாக மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கான கட்டண விஷயத்தில் மாநில அரசின் ஆலோசனைகளைக் கேட்டதாகத் தெரியவில்லை. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைகளையும் மதிப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, தற்காலிகமாக தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தான் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்த் தொற்றின் வேகத்துக்கு தகுந்தபடி உரிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. கரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவா்கள், செவிலியா் ,லேப் டெக்னீசியன்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோரை போதுமான அளவுக்கு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். மாநகரில் உள்ள 60 வாா்டுகளிலும் கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதுடன், தடுப்பூசி செலுத்தும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். திருப்பூா் மாவட்டத்துக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அதிக அளவில் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், சேய் நல விடுதிகளில் பணியாற்றிவரும் ஆஷா பணியாளா்களை செவிலியா்களாக நியமனம் செய்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.