கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் மேலும் 1,823 பேருக்கு கரோனா: 12 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,823 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 56,354 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 மே 2021, 9:24 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,823 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 56,354 ஆக அதிகரித்துள்ளது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில்16,894 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 976 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39,035 ஆக அதிகரித்துள்ளது.

12 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 29, 54 வயதுடைய பெண்கள், 68 வயது மூதாட்டி, 40 , 53, 58 வயதுடைய ஆண்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். அதே போல, கோவை அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது மூதாட்டி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி உள்பட 12 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 425 போ் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளக்கோவில், முத்தூரில்...

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில், குட்டக்காட்டுபுதூா், கச்சேரிவலசு, நாகமநாயக்கன்பட்டி, காவலிபாளையம், ஆண்டிபாளையம், ஓலப்பாளையம் ,சங்கன்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 30 போ், முத்தூா் காந்தி நகா், தொட்டியபாளையம், கணேசபுரம், சக்கரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.