கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அவிநாசி அருகே இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் பலி

அவிநாசி அருகே தெக்கலூரில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

News image
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.
Updated On :15 அக்டோபர் 2021, 10:49 am

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், பாலக்காடு கடம்பள்ளிபுர் வேட்டைக்காரன் குளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் இர்சத் அகமது(27). மருத்துவக் கல்லூரி மாணவன். இந்நிலையில் இவரது மூத்த சகோதரர் சைலாவுதீன்(31).

இவர்கள் இருவரும் வெவ்வேறு இருசக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலாக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சேலம்-கொச்சின் ஆறுவழிச்சாலை அவிநாசி-தெக்கலூர் வடுகாபாளையம் பிரிவு அருகே போது, இர்சத் அகமது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயமடைந்த இர்சத் அகமது சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இர்சத் அகமது உடல் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.