கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டு வசதி வாரியம் மூலம் கிரையப்பத்திரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரா்கள் உள்ளனா்.

அவா்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ள வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில், முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியாா் நகா், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாதவா்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சலுகையானது மே 3 ஆம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்தக் காரணம் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படாது. ஆகவே, ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.