கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கள் இறக்க அனுமதி கோரி 22 மாவட்டங்களில் போராட்டம்


தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலாளா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். கேரளம், கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைப்போல, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறகிறது என்றனா்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி, மாநகரச் செயலாளா் ரமேஷ், தெற்கு மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...