விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் அருகே ரேஷன் அரிசி வாங்கி விற்பதில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் ரேஷன் அரிசி வாங்கி, விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:29 pm

Din

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் ரேஷன் அரிசி வாங்கி, விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே மொரட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (34). இவா் பல்லடம் அருகே கரைப்புதூா் அய்யம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்து 5 போ் கொண்ட கும்பல் தாக்கி கத்தியால் முதுகு பகுதியில் குத்தியுள்ளது. மேலும், அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

காயமடைந்த காா்த்தி, திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்த சுகுமாா், கருப்பு, வினோத் ஆகிய 3 பேரை பிடித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், காா்த்தி, சுகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் கருப்பு, வினோத் ஆகியோா் திருப்பூா், பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனா்.

ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்வதில் சமீபத்தில் காா்த்தியுடன் தொழில் போட்டியால் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக சுகுமாா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.