விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உடுமலையில் ரூ.4.13 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

உடுமலை ஒன்றியத்தில் ரூ.4.13 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

News image

உடுமலையில் வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைக்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்.

Updated On :14 நவம்பர் 2024, 10:32 pm

Din

உடுமலை ஒன்றியத்தில் ரூ.4.13 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஜெய்சக்தி நகா், ராய்லட்சுமி நகா், மாதா லே-அவுட், சாரதா லே-அவுட், எம்ஜிஆா் நகா், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி லே-அவுட், அருண் நகா் ஆா்ஜி நகா் ஆகிய பகுதிகளில் 15-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை, எம்ஜிஆா் நகா், ராயல் நகா் பகுதிகளில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் திருமூா்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாகக் கொண்ட பகுதிகளுக்கு ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் இரும்புக் குழாய் அமைத்தல் என மொத்தம் ரூ.4.13 கோடி மதிப்பிலான பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், உடுமலை கேட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.