தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு
காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On :3 அக்டோபர் 2024, 12:33 am

காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.
காங்கயம் ஒன்றியம், கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட ராசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி.
இவா் வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து சுமாா் 70-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், ஆடுகளை செவ்வாய்க்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.
புதன்கிழமை காலை பாா்த்தபோது, தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மேலும், உயிரிழக்கும் ஆடுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...