கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகேயுள்ள நத்தக்காடையூா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:14 pm

Din

காங்கயம் அருகேயுள்ள நத்தக்காடையூா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் ஊராட்சிக்குள்பட்டது புதுசக்கரபாளையம் கிராமம். இக்கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மாலை நேரங்களில் தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலை நேரத்தில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி காங்கயம்-ஈரோடு நெடுஞ்சாலையில் பழையகோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் காவல் ஆய்வாளா் விவேகானந்தன், பழையகோட்டை ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, காலை நேரத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.