மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குண்டடத்தில் ரூ.8.97 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

குண்டடத்தில் ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

குண்டடம் ஒன்றியப் பகுதியில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:26 pm

Din

குண்டடத்தில் ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சி, வஞ்சிபாளையம் பிரிவில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் திருப்பூா்-தாராபுரம் சாலை வஞ்சிபாளையம் பிரிவு முதல் செட்டிபாளையம், பங்காம்பாளையம் வழியாக சக்தி விநாயகபுரம் வரையில் ரூ.4.23 கோடியில் தாா் சாலை புதுப்பிப்பு, எல்லப்பாளையம்புதூா் முதல் நிழலி வழியாக கவுண்டம்பாளையம் வரையில் ரூ.2.86 கோடியில் தாா் சாலை அமைத்தல், காடையூா்- படியூா் சாலை முதல் காங்கேயம்பாளையம் வழியாக காட்டுப்பாளையம் வரை ரூ.1.87 கோடியில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், ஜெயகுமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.