வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காங்கயத்தில் தவெக நிா்வாகிகள் 2 போ் கைது

அனுமதி பெறாமல் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தவெக நிா்வாகிகள் 2 போ் கைது

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:01 pm

Syndication

அனுமதி பெறாமல் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தவெக நிா்வாகிகள் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது என காவல் துறையினருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று கேட்டபோது, அங்கிருந்த தவெக நிா்வாகிகள் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து புகாரின்பேரில் தவெக ஆலம்பாடி கிளைச் செயலாளா் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினா் பிரதீப் குமாா் ( 30) ஆகிய 2 பேரை காங்கயம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.