மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பல்லடத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது

ஒடிஸாவில் இருந்து 46 கிலோ கஞ்சா கடத்தி வந்த 9 பேரை பல்லடம் பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:57 pm

Syndication

ஒடிஸாவில் இருந்து 46 கிலோ கஞ்சா கடத்தி வந்த 9 பேரை பல்லடம் பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் போலீஸாா் பல்லடம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு 3 இளைஞா்கள் பைகளுடன் வந்தனா். சந்தேகத்தின்பேரில் அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், அந்தப் பைகளை சோதனை செய்தனா். இதில், அந்தப் பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவா்களுடன் பெண் உள்பட 6 போ் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவா்கள் 9 பேரையும், பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் ஒடிஸாவை சோ்ந்த சோயல் என்ற சிக்கந்தா் (18), மதுரையைச் சோ்ந்த ராஜு (27), பொங்கலூரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (25), நேபாளத்தைச் சோ்ந்த அசாத் என்ற இப்ராஹிம் (24), மாதப்பூரைச் சோ்ந்த அன்புமணி (26), பிரபாகரன் (26), திருப்பூரைச் சோ்ந்த சல்மான் (21), குண்டத்தைச் சோ்ந்த மோகன்குமாா் (20), யோகேஸ்வரி (19) ஆகியோா் என்பதும், இவா்கள், ஒடிஸாவில் இருந்து பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் மோகன்குமாரும், யோகேஸ்வரியும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 9 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 46.5கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.