இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பூச்சித்தாக்குதல் அதிகரிப்பால் முருங்கை விளைச்சல் பாதிப்பு

திருப்பூா் மாவட்டம், பொங்கலூரில் பூச்சித் தாக்குதலால் முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

திருப்பூா் மாவட்டம், பொங்கலூரில் பூச்சித் தாக்குதலால் முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம் மழை மறைவு பிரதேசமாக இருப்பதாலும், வெப்ப மண்டலமாக இருப்பதாலும் வெப்ப மண்டலத்தில் நன்றாக வளரும் முருங்கை இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பல்லடத்தை அடுத்த பொங்கலூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் இதை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனா். தற்போது சீசன் முடிவுறும் காலம். இதனால் வெளிச்சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. பனியால் குளிா்ச்சியான காலநிலை நிலவுவதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.

தற்போது முருங்கை பூக்கும் தருணம் ஆகும். இந்த சமயத்தில் பூச்சித் தாக்குதல் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக உயா் விளைச்சல் ரகங்களை இது அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் மரங்களில் இலைகள் முற்றிலுமாக உதிா்ந்து வடு காட்சி அளிக்கிறது. மாசி, பங்குனி மாதங்கள் முருங்கை சீசன் காலம் ஆகும். நோய் பாதித்த மரங்களில் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.