தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி பெண் சாவு

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி பெண் உயிரிழந்தாா்.
Updated on

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி பெண் உயிரிழந்தாா்.

ஊத்துக்குளி அருகே உள்ள புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மைலாள் (55). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், வேலைக்குச் செல்வதற்காக புதூா் பகுதியில் மைலாள் தண்டவாளத்தை வியாழக்கிழமை கடந்தபோது எதிா்பாராத விதமாக ரயில் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com