அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

குன்னத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:50 pm

Syndication

குன்னத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் மாமரத்துப்பாளையம் பஞ்சுக்காரா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (73 ), விவசாயி. இவா் தனது ஆட்டை இனப்பெருக்கம் செய்வதற்காக குன்னத்தூா் அருகே கைக்கோளான்தோட்டம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியாக கிணற்றுப் பகுதிக்கு சென்றபோது, தனது மகன் பாலமுருகனை (42) கைப்பேசி மூலம் அழைத்து, வந்துள்ள இடம் எது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளாா். அப்போது உடன் வந்த ஆடு ஓடியுள்ளது. இதைப் பிடிக்கச் சென்ற முதியவா் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னத்தூா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் முதியவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.