வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அவிநாசி அருகே மரக்கடைக்குள் புகுந்த காா்

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து இரண்டு காா்கள் மீது மோதி மரக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவா் சூலூரில் இருந்து ஈரோடு மாவட்டம், நம்பியூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா்.

அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீா்ப்பந்தல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற இரண்டு காா்களின் மீது மோதி, சாலையோரம் இருந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மரம் இழைக்கும் மரக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கலைச்செல்வன், மற்றொரு காரில் வந்த கருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். மேலும், மரக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சேவூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.