திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே வணிக வரித் துறை துணை மாநில வரி அலுவலா் ஜெயசீலன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வாடகை காரில் வந்த 2 பயணிகளின் உடைமைளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ரூ.9.90 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.
பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


