தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:52 pm

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே வணிக வரித் துறை துணை மாநில வரி அலுவலா் ஜெயசீலன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாடகை காரில் வந்த 2 பயணிகளின் உடைமைளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ரூ.9.90 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.