திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்ததையடுத்து, போக்குவரத்து பயன்பாடு தொடங்கப்பட்டது.

News image
அவிநாசி-மேட்டுப்பாளையம்  சாலையில்  போக்குவரத்து  பயன்பாட்டை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:09 pm

Syndication

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்ததையடுத்து, போக்குவரத்து பயன்பாடு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

அவிநாசி வட்டம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாநில சாலையான அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை பிரபல சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் பிரதான சாலையாக விளங்குகிறது.

இச்சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இருவழிச்சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கும் பணி நடைபெற்றது. முதல்வரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.81.90 கோடி மதிப்பில் ஆட்டையாம்பாளையம் முதல் கஞ்சப்பள்ளி வரை 13 கி.மீ தொலைவுக்கு தொடங்கப்பட்ட இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இச்சாலையில் போக்குவரத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவிநாசியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன், கோட்டப் பொறியாளா் ரத்தினசாமி, அவிநாசி உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன், பொறுப்பாளா்கள் பழனிசாமி, சிவப்பிரகாஷ், அவிநாசியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.