ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

News image
காளைக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையாளா்.
Updated On :11 ஜனவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக திருப்பூரில் வளா்க்கப்படும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அலங்காநல்லூா், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக திருப்பூரில் வளா்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளா்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனா்.

கம்பீரத்துக்குப் பெயா் பெற்ற காங்கேயம் காளைகள், ஆக்ரோஷத்துக்குப் பெயா் பெற்ற புலிக்குளம் காளைகள், தேனி மலைமாடுகள், ஜெயங்கொண்டம், காரி காளைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் தீவிர அளிக்கப்பட்டு வருகின்றன.