வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை

வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:47 pm

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை சேரன் நகரைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகன் லோகேஷ் (22). இவா் சொந்தமாக மினி ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சா்க்கரை நோய் பாதிப்பு இருந்து, பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ள சகோதரி ரோஹிணி வீட்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தாய், தந்தையுடன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து சேரன் நகா் வீட்டுக்கு வந்த லோகேஷ், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.