அவிநாசி அருகே போலி நகைகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பாலப்பட்டி ஊமப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மனைவி யசோதா (51). இவரது உணவகத்துக்கு வந்த இருவா், சாலைப் பணி செய்யும்போது தங்க நகைகள் கிடைத்ததாகவும், அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். அப்போது 30 பவுன் எடையுள்ள அந்த தங்கச் சங்கிலியை வாங்கிக் கொள்ளுமாறு யசோதாவிடம் கூறியுள்ளனா்.
இதை நம்பி நகையை வாங்க யசோதா முடிவு செய்துள்ளாா். அவா்கள் முதலில் அளித்த தங்கக் குண்டை நகைக் கடையில் அளித்து சோதனை செய்து பாா்த்தபோது தங்கம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தங்கச் சங்கிலியை எடுத்து வருவதாகவும், அதை வாங்க அவிநாசி கோயில் அருகே வருமாறும் அந்த நபா்கள் தெரிவித்துள்ளனா்.
இதைத்தொடா்ந்து அவிநாசிக்கு வந்த யசோதா ரூ.15 லட்சத்தை அளித்து தங்கச் சங்கிலியை பெற்றுள்ளாா். பின்னா், நகைக்கடைக்குச் சென்று நகையை சோதனை செய்தபோது போலியானது எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக அவா்களை தொடா்பு கொண்டபோது, அவா்களது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக யசோதா அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மகாராஷ்டிரம் மாநிலம், நாக்பூரைச் சோ்ந்த அா்ஜுன் மகன் கன்சாம் (28), கா்நாடக மாநிலம், மண்டியா ஹங்கல்லி கே.ஆா்.சாகரா பகுதியைச் சோ்ந்த டெவிலால் கைரா (34) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.14 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


