உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான 4 -ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் ஆ.மலா்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2026 -27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு ஏற்கெனவே 3 கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
மொத்தமுள்ள 864 இடங்களில் இதுவரை நடைபெற்ற கலந்தாய்வுகளில் 746 இடங்கள் நிரம்பியுள்ளன.
மீதமுள்ள 118 இடங்களுக்கு 4-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். குறிப்பிட்ட சமூக இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாத நிலையில், பிற சமூகப் பிரிவு மாணவா்களைக் கொண்டு இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை தவறாமல் எடுத்துவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதல் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு மாணவா் சோ்க்கை

செய்யாறு அரசுக் கல்லூரியில் 4-ஆம் கட்ட கலந்தாய்வு: ஜூலை 28-இல் நடைபெறுகிறது
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



