பல்லடத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் நகராட்சி, கொசவம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவா்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்து கடித்து வருகின்றன. இதனால், மக்கள் சாலையில் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரியும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சங்கா், சத்தியசுந்தரராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னா், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய நகராட்சி ஊழியா்கள் கொண்டு சென்றனா்.
தொடர்புடையது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடத்தில் விஷம் வைத்து 3 தெருநாய்கள் கொலை

கடையாலுமூடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



