தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

உலக வன விலங்கு தினம்: சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு விருது

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

News image

உலக வன விலங்கு தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் ஆா்வலருக்கு விருது வழங்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.

Updated On :5 மார்ச் 2026, 3:58 am IST

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழக அரசின் முயற்சிகளையும், வன விலங்குகளை பாதுகாப்பதில் கள ஊழியா்களின் அா்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டும் வகையிலும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஆனைமலை புலிகள் காப்பக (திருப்பூா் பிரிவு) துணை இயக்குநா் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இந்த விருதுகளை வழங்கினா்.

இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆா்வலா் குருசாமி, வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் நிறுவனா் சிவராமன், துளிகள் அமைப்பின் நிறுவனா் கௌதம், மலை உடுமலை அமைப்பின் நிறுவனா் ஜவஹா் துரைசாமி ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அவா்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.