உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.
வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழக அரசின் முயற்சிகளையும், வன விலங்குகளை பாதுகாப்பதில் கள ஊழியா்களின் அா்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டும் வகையிலும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஆனைமலை புலிகள் காப்பக (திருப்பூா் பிரிவு) துணை இயக்குநா் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இந்த விருதுகளை வழங்கினா்.
இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆா்வலா் குருசாமி, வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் நிறுவனா் சிவராமன், துளிகள் அமைப்பின் நிறுவனா் கௌதம், மலை உடுமலை அமைப்பின் நிறுவனா் ஜவஹா் துரைசாமி ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அவா்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உயிரியல் பன்முகத் தன்மை தினம்

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

சென்னை மெட்ரோவுக்கு உலகளாவிய விருது!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



