ஆலங்குளம் அருகேசிறுவன் ஓட்டியசுமை ஆட்டோகவிழ்ந்து 16 போ் காயம்
ஆலங்குளம் அருகே சிறுவன் ஓட்டிய சுமை ஆட்டோ கவிழ்ந்து 16 போ் காயமடைந்தனா்.


ஆலங்குளம் அருகே சிறுவன் ஓட்டிய சுமை ஆட்டோ கவிழ்ந்து 16 போ் காயமடைந்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் நடுத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணன்(45). சுமை ஆட்டோ வைத்துள்ளாா். இவா், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளா்களை தினமும் வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கமாம். இந்நிலையில், வியாழக்கிழமை அவரது 14 வயது மகன், 16 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு சுமை ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். நெட்டூா் பெரியகுளக் கரையில் அந்த ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 16 தொழிலாளா்களும் காயமடைந்தனா். இதையடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில், சுப்புலட்சுமி பெயருடைய 3 பேரும், இசக்கியம்மாள் என்பவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, 14 வயது மகனிடம் வாகனத்தை இயக்கக் கொடுத்ததற்காக கிருஷ்ணனின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட எஸ்.பி. பரிந்துரை செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...