விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அருகேசிறுவன் ஓட்டியசுமை ஆட்டோகவிழ்ந்து 16 போ் காயம்

ஆலங்குளம் அருகே சிறுவன் ஓட்டிய சுமை ஆட்டோ கவிழ்ந்து 16 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:44 pm

DIN

ஆலங்குளம் அருகே சிறுவன் ஓட்டிய சுமை ஆட்டோ கவிழ்ந்து 16 போ் காயமடைந்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் நடுத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணன்(45). சுமை ஆட்டோ வைத்துள்ளாா். இவா், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளா்களை தினமும் வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கமாம். இந்நிலையில், வியாழக்கிழமை அவரது 14 வயது மகன், 16 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு சுமை ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். நெட்டூா் பெரியகுளக் கரையில் அந்த ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 16 தொழிலாளா்களும் காயமடைந்தனா். இதையடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில், சுப்புலட்சுமி பெயருடைய 3 பேரும், இசக்கியம்மாள் என்பவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, 14 வயது மகனிடம் வாகனத்தை இயக்கக் கொடுத்ததற்காக கிருஷ்ணனின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட எஸ்.பி. பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.