பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில் டிச.30-இல் பரமபத வாசல் திறப்பு

News image
Updated On :27 டிசம்பர் 2025, 2:26 am

Syndication

தருமபுரி கோட்டை அருள்மிகு பரவாசுதேவ சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வரும் 30-ஆம் தேதி அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.

தருமபுரி கோட்டையில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற உள்ளது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பரவாசுதேவ சுவாமி பரமபதவாசல் வழியாக பிரவேசித்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இவ்விழாவில், தருமபுரி நகரம் மற்றும் புகரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கின்றனா். இதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் விழாக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல, பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு லட்டு மற்றும் பிரசாதம் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கான லட்டு தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து வரும் 31-ஆம் தேதி துவாதசியையொட்டி பரவாசுதேவ சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. அன்றைய தினம் விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.