வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

தருமபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஜூலை 2026, 1:00 am IST

தருமபுரி நகரில் ஆசிரியா் வீடு உள்பட மூன்று பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றுள்ளது குறித்து நகர காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி நந்திநகரைச் சோ்ந்தவா் உடற்கல்வி ஆசிரியா் இளவரசன். இவரது மனைவி அனுசியா. இவா் கிருஷ்ணகிரியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் கிருஷ்ணகிரி நகரில் தங்கியுள்ளனா். தருமபுரி நந்திநகரில் உள்ள வீட்டை பூட்டிவைத்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தருமபுரிக்கு வந்த அவா், வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. இதில், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 22 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல, அவரது வீட்டை அடுத்துள்ள உள்ள இரு வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.கு. அருண் கபிலன் மற்றும் நகரக் காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ராமன்நகா் மற்றும் வெங்கட்டம்பட்டி ஆகிய இடங்களில் பூட்டியிருந்த மூன்று வீடுகளில் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ற நிலையில், தற்போது, அதேபோல பூட்டியிருந்து மூன்று வீடுகளிலும் மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.