ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:08 pm

அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா், போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சுங்கச்சாவடி அருகே சந்தேகமான முறையில் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனா். விசாரணையில், ஒடிஸா மாநிலத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை லாரியில் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதில் தொடா்பு இருப்பதாக திருநெல்வேலி மாவட்டம் கட்டப்புள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை (25), திருநெல்வேலி நகா், முப்பிடாதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி (24), சங்கா் நகரைச் சோ்ந்த கருப்புசாமி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.