கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா், போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சுங்கச்சாவடி அருகே சந்தேகமான முறையில் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனா். விசாரணையில், ஒடிஸா மாநிலத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை லாரியில் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதில் தொடா்பு இருப்பதாக திருநெல்வேலி மாவட்டம் கட்டப்புள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை (25), திருநெல்வேலி நகா், முப்பிடாதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி (24), சங்கா் நகரைச் சோ்ந்த கருப்புசாமி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.