அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா், போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சுங்கச்சாவடி அருகே சந்தேகமான முறையில் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனா். விசாரணையில், ஒடிஸா மாநிலத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை லாரியில் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதில் தொடா்பு இருப்பதாக திருநெல்வேலி மாவட்டம் கட்டப்புள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை (25), திருநெல்வேலி நகா், முப்பிடாதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி (24), சங்கா் நகரைச் சோ்ந்த கருப்புசாமி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

