கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

News image

சிறை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே வரதட்சிணை துன்புறுத்தலில் மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த கணவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், லளிகம் அடுத்த அப்பனஅள்ளி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (30). இவரது மனைவி பழனியம்மாள். இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முடிவுற்றது. இதில், பழனியம்மாள் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.